படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கிய மலையாள நடிகர் டோவினோ தாமஸ்

படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி தீவிர சிகிச்சை பிரிவில் பிரபல நடிகர் டோவினோ தாமஸ் இருக்கிறார் என்ற செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மலையாள சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவர் டோவினோ தாமஸ். படத்தின் கதைக்காக தன்னை எந்த நிலைக்கும் மாற்றக் கூடியவர். அதாவது நம் கோலிவுட் விக்ரம் போல் என்கின்றனர்.

அப்படி அவர் தனது படங்களின் மூலம் தனது நடிப்பு திறமையையும் காட்டியுள்ளார். தற்போது இவருக்கு ஒரு சோகமான நிகழ்வு நடந்துள்ளது.

இவர் காலா என்ற படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்துள்ளார். அப்போது படப்பிடிப்பில் அவருக்கு பெரிய விபத்து ஏற்படுள்ளது. உடன் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த தகவல் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி மலையாள படஉலகினர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.