பொன்னியின் செல்வன்-2 படத்தை மணிரத்னம் சிறப்பாக செய்துள்ளார்... நடிகர் கமல் கருத்து

சென்னை: பொன்னியின் செல்வன் படத்தை நல்ல படமாக தான் நான் பார்க்கிறேன். மணிரத்னம் இதனை சிறப்பாக செய்திருக்கிறார் என்று நடிகர் கமல் தெரிவித்துள்ளார்.

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களுடன் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆதித்த கரிகாலனாக விக்ரம், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி, வந்தியத் தேவனாக கார்த்தி, குந்தவையாக திரிஷா, நந்தினியாக ஐஸ்வர்யா ராய் என பொன்னியின் செல்வன் வேடங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன.