மாவீரன் படப்பிடிப்பு நிறைவு... சிவகார்த்திகேயன் தகவல்

சென்னை: மாவீரன் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது, அடுத்து கமல் சார் தயாரிக்கும் படத்தில் நடிக்க உள்ளேன் என்று சிவகார்த்திகேயன் தெரிவித்தார். இது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் படத்தை மண்டேலா இயக்குனர் மடன் அஷ்வின் இயக்கியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது அஸ்வினுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே ஆரம்பம் முதலே கருத்து மோதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் படக்குழு அதை முற்றிலுமாக மறுத்துள்ளது. இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் இறுதிக்கட்ட காட்சிகளை படக்குழு சமீபத்தில் பாண்டிச்சேரியில் படமாக்கியது. ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனரான யானிக் பென் முக்கியமான ஆக்ஷன் காட்சிகளை படமாக்க அமர்த்தப்பட்டார்.

சமீபத்தில், 1946 இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன், “மாவீரன் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது, அடுத்து கமல் சார் தயாரிக்கும் படத்தில் நடிக்க உள்ளேன் என்று தெரிவித்தார். இது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.