எல் ஷேப்பில் அட்டகாசமாக அமர்ந்து காண்பித்த நாகேஷ்... இயக்குனரின் ஆச்சரியம்

சென்னை: எல் ஷேப்பில் அமர்ந்து காண்பித்தார் நாகேஷ் என்று பெருமையாக அவரை பற்றி தெரிவித்துள்ளர் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்.

தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களான கமல், ரஜினி, அஜித், விஜய் என்று நான்கு நடிகர்களையும் இயக்கிய ஒரே இயக்குநர் என்ற பெருமை கே.எஸ்.ரவிக்குமாரைத்தான் சேரும்.

அவர் பேட்டியொன்றில் ‘அனுபவி ராஜா அனுபவி திரைப்படத்தில் ஒரு காட்சியில் நாகேஷ் கார் மீது அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருப்பாராம் அப்போது திடீரென்று அவர் அமர்ந்திருந்த கார் ரிவர்ஸ் எடுத்துச் செல்ல, அவர் கீழே விழாமல் அப்படியே காற்றில் எல் ஷேப்பில் அமர்ந்திருப்பாராம்.

அதன் பின்னர் எதேச்சையாக திரும்பி பார்ப்பது போல் காரைப் பார்க்க, கார் சென்றுவிட்டது போல என்று காமெடியாக ஒரு ரியாக்‌ஷன் கொடுத்துவிட்டு எழுந்து செல்வாராம்.

கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் இல்லாத காலகட்டத்தில் அவர் உண்மையாகவே அப்படி நடித்துள்ளார் என்றும் அதன் பின்னர் தான் கேட்டுக் கொண்டபோது தனக்காக அப்படி அமர்ந்து காட்டுவார்’ என்றும் கே.எஸ்.ரவிக்குமார் பழைய நினைவுகளை வெளிப்படுத்தியிருக்கிறார்.