நந்திவர்மன் படம் புதிய அனுபவத்தை தரும்... இயக்குனர் பெருமிதம்

சென்னை: நந்திவர்மன் படம் உங்களுக்கு ஒரு புதிய அனுபவத்தைத் தரும் என்று இயக்குனர் பெருமாள் வரதன் தெரிவித்துள்ளார்.

நந்திவர்மன் படத்தில் சுரேஷ் ரவி நாயகனாக நடிக்கிறார். ஏகே ஃபிலிம் பேக்டரி சார்பில் அருண்குமார் தயாரித்துள்ள இந்தப் படத்தை பெருமாள் வரதன் இயக்கியுள்ளார். ஆஷா கவுடா, போஸ் வெங்கட், நிழல்கள் ரவி மற்றும் பலர் நடித்துள்ளனர்.


நான் செங்கோட்டைக்குச் சென்றபோது, ​​அங்குள்ள அமானுஷ்ய நிகழ்வுகளைப் பற்றி ஒரு பெரியவர் என்னிடம் கூறினார். ஆச்சரியமாக இருந்தது. அப்போது பல்லவர்களைப் பற்றியும், அங்கு நிலவும் அமானுஷ்ய விஷயங்களைப் பற்றியும் அப்பகுதியில் ஆய்வு செய்தேன். அற்புதமான கதைகள் கிடைத்தன.

அதை அடிப்படையாக வைத்து இந்தப் படத்தை உருவாக்கினேன். படம் தொடங்கும் முன் பல்லவர்களின் வரலாற்றை அனிமேஷன் மூலம் சொல்கிறோம். நந்திவர்மன் வாழ்ந்த இடத்தை தொல்லியல் துறையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.


அப்போது நடக்கும் பிரச்சனைகள், பல்லவர்கள் பற்றிய ரகசியங்கள் வெளிவரும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் படம் உங்களுக்கு ஒரு புதிய அனுபவத்தைத் தரும். இவ்வாறு பெருமாள் வரதன் கூறினார்