தொடர்ந்து நடிப்பதில் பிஸி... அடுத்தடுத்து 2 படங்களில் புக் ஆன நயன்தாரா

சென்னை: அடுத்தடுத்து தொடர்ந்து படங்களில் புக் ஆகி பிசியாக நடிக்கிறார் நடிகை நயன்தாரா.

கடந்த வருடம் அவரது நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல், ஓ2, கனெக்ட், மலையாளத்தில் கோல்டு, தெலுங்கில் காட் பாதர் போன்ற 5 படங்கள் வந்தன. இதனை அடுத்து ஓ2, கனெக்ட் படங்கள் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் கொண்டவை. தற்போது ஜெயம் ரவி ஜோடியாக இறைவன், இந்தியில் ஷாருக்கானுடன் ஜவான் படங்களில் நடித்து கொண்டு வருகிறார்.

இப்படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. மேலும் 2 புதிய படங்களில் நயன்தாரா நடிக்க இருப்பதாகவும், அதில் ஒரு படத்தை மித்ரன் ஜவகரும், இன்னொரு படத்தை மோகன் ராஜாவும் இயக்க இருப்பதாகவும் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

மேலும் மித்ரன் ஜவஹர் இயக்கிய ‘யாரடி நீ மோகினி’ படத்தில் தனுஷ் ஜோடியாக ஏற்கனவே நயன்தாரா நடித்து இருந்தார். மோகன்ராஜா இயக்கும் படம் தனி ஒருவன் படத்தின் 2-ம் பாகம் ஆகும். எனவே இதன் முதல் பாகத்தில் ஜெயம் ரவியும் நயன்தாராவும் ஜோடியாக நடித்து இருந்தனர். இப்போது 2-ம் பாகத்திலும் இணைகிறார்கள்.