நயன்தாரா குழந்தைகளுக்கு என் மடியில் வைத்துதான் காது குத்து விழா: நடிகர் சந்தானம் நகைச்சுவை

சென்னை: நயன்தாரா குழந்தைகளுக்கு என் மடியில் வைத்து தான் காதுகுத்து விழா என்று நடிகர் சந்தானம் நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.

நடிகர் சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் டிடி ரிட்டன்ஸ்' . இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆர்.கே. என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஒ.எப்.ஆர்.ஒ இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதையடுத்து சமீபத்திய பேட்டியில் நடிகர் சந்தானத்திடம் நயன்தாரா குறித்த கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், வல்லவன் என்ற படத்தில் நடித்ததில் இருந்து நயன்தாராவை நன்றாக தெரியும். எனக்கும் அவருக்கும் உள்ள உறவு அண்ணன்- தங்கை உறவு. சினிமாதுறையில் எனக்கு கிடைத்த தங்கை என கூறினார்.

மேலும் நான் அவர் வீட்டிற்கு சென்ற போது எனக்கு தட புடலாக விருந்து வைத்தனர். நயன்தாரா என்னை 'அண்ணா' என்று தான் அழைப்பார். அவரது குழந்தைக்கு எனது மடியில் வைத்து தான் காது குத்த வேண்டும் அப்போது தான் தாய்மாமன் சீர் செய்வேன் என்று காமெடியாக கூறியதாக தெரிவித்தார்.