நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதி எடுத்த முடிவு

சென்னை: வாடகை தாய் விவகாரத்தில் ஆவணங்களை ஒப்படைக்க நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதி தயாராக உள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.

நானும் ரவுடிதான் படத்தின் படப்பிடிப்பில்தான் நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. கடந்த 7 வருடமாக காதலித்து வந்த இவர்கள், லிவிங் டு கெதர் முறையில் வாழ்ந்து வந்தனர். இந்த ஆண்டு ஜூன் 9ம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில் திடீரென கடந்த 9ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை, தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்திருப்பதாக விக்னேஷ் சிவன் டிவிட்டரில் தெரிவித்தார்.

இந்த தகவல் ரசிகர்களுக்கும் திரையுலகினருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இது தொடர்பாக விசாரித்ததில், வாடகை தாய் மூலம் நயன்தாரா குழந்தை பெற்றிருப்பது தெரிய வந்தது. இந்த நிலையில் நயன்தாரா விதிமுறைகளை மீறி குழந்தை பெற்றாரா என விசாரிக்க தமிழக அரசு குழு அமைத்திருந்தது.

இந்நிலையில் இரட்டை குழந்தைகள் பெற்றது தொடர்பான ஆவணங்களை ஒப்படைக்க உள்ளதாக நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி தெரிவித்துள்ளதாக மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் நயன்தாரா- விக்னேஷ்சிவன் விதிமுறைகளில் ஈடுபட வாய்ப்பில்லை என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.