பிக்பாஸ், அனிதா சம்பத், கற்பனை உலகு, நெட்டிசன்கள்

அடுத்த ஜுலிதான் அனிதா சம்பத் என்று நெட்டிசன்கள் கழுவி ஊற்றிவருகின்றனர். ஆரம்பத்தில் இருந்தே கெட்டபெயரை சம்பாதித்து வருகிறார்.

கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதில், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணாதிசயம் எனில் செய்தியாளர் அனிதா சம்பத் எப்போதும் எதையாவது காரணம் காட்டி அழுது கொண்டே இருக்கிறார்.

தன்னிடம் யாரும் பேசுவதில்லை.. என்னிடம் யாரும் ஆலோசனை கேட்பதில்லை என ஏற்கனவே ஆரி மற்றும் ரியோவிடம் ஒப்பாரி வைத்தார். இந்நிலையில், நேற்று பாத்ரூமில் கதவை மூடிக்கொண்டு ஓவென அழுது ஒப்பாரி வைத்தார். அதன் பின் நிஷா உள்ளே சென்று அவரை வெளியே கூட்டி வந்தார்.

அதன்பின், தனியறையில் பிக்பாஸுடன் பேசும் போதும் சின்ன குழந்தை போல் அழுது ஒப்பாரி வைத்தார். ஒரு கட்டத்தில் அவர் அழுவது எரிச்சலை தரும் அளவுக்கு இருந்தது. அதன்பின், ஒருவழியாக பிக்பாஸ் அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.

இதைத்தொடர்ந்து 'இப்படி கற்பனை உலகில் வாழ்ந்துகிட்டே இருக்கே… நிஜ உலகிற்கு வாம்மா அனிதா!..' என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். மேலும், ஊர் வம்பை செய்தியா வாசித்து பழக்கபட்ட இந்த அனிதா வாயி சும்மா இருக்காது போலிருக்கே!.. என்றும் அவரை கலாய்த்து வருகின்றனர். மேலும் சிலர் அடுத்த ஜுலி அனிதாதான் என்று கழுவி ஊற்றி வருகின்றனர்.