காக்கா முட்டை படத்திற்கு பின்னர் வாய்ப்பே வரலை... பாராட்டு மட்டும்தான் கிடைச்சுச்சு

சென்னை: காக்காமுட்டை படத்தில் நடித்த பிறகு தமிழ் சினிமாவில் உள்ள பெரும்பாலானோர் என்னை தொடர்பு கொண்டு பாராட்டினர். ஆனால் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று ஐஸ்வர்யா ராஜேஷ் ஓப்பன் ஸ்டேட் மெண்ட் விடுத்துள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது பல படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்யும் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் சமீபத்தில் வெளியான பர்ஹானா மற்றும் தீராக் காதல் ஆகிய படங்கள் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஐஸ்வர்யா ராஜேஷ், “காக்காமுட்டை படத்தில் நடித்த பிறகு தமிழ் சினிமாவில் உள்ள பெரும்பாலானோர் என்னை தொடர்பு கொண்டு பாராட்டினர். ஆனால் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி தவிர, பெரிய ஹீரோக்கள் எனக்கு எந்த வாய்ப்பும் கொடுக்கவில்லை, ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் இடையே பெரிய இடைவெளி உள்ளது.

அதன் பிறகு கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிக்க ஆரம்பித்தேன். அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. இப்போது என் படங்களில் நானே ஹீரோவாக இருக்கவேண்டும் என்ற முடிவை எடுத்து விட்டேன்” எனக் கூறியுள்ளார்.