இல்லை... சாதாரண காய்ச்சல்தான்... மணிரத்னத்திற்கு கொரோனா இல்லை

சென்னை: பிரபல திரைப்பட இயக்குநர் மணிரத்னத்துக்கு கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இயக்குநர் மணிரத்னத்துக்கு கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்துள்ளது.

காய்ச்சல் அறிகுறிகள் இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா தொற்று பாதிப்பில்லை என பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. இன்று (19ம் தேதி) காலை, இயக்குநர் மணிரத்னத்துக்கு கொரோனா தொற்றுக் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், தொற்று இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.

மணிரத்னம் தற்போது பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம், பிரபு, ரகுமான், பாபு ஆண்டனி, கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா லக்ஷ்மி என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து உள்ளனர்.


பொன்னியின் செல்வன் பட வெளியீட்டு பணிகளில் ஈடுபட்டு கொண்டிருந்த நிலையில் இயக்குநர் மணிரத்னம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.