சென்னை: சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடித்து வெளிவந்த திரைப்படம் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ். இந்த படம் பாக்ஸ் ஆபிசில் ரூ.1 கோடி வரை வசூல் எடுத்து உள்ளதாம். எதிர்பார்த்த அளவிற்கு வசூல் இல்லை. படமும் ரசிகர்களை கவரவில்லை. இருப்பினும் வரும் நாட்களில் வரவேற்பை பெறும் என்று தெரிகிறது.
பல ஆண்டுகளுக்கு பின் வடிவேலு நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தில் வடிவேலுவுடன் இணைந்து ஆனந்த் ராஜ், ஷிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இப்படம் மக்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
இந்நிலையில், வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் முதல் நாள்
மட்டுமே ஏறக்குறைய ரூ. 1 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ளது.
நடிகர்
ஆனந்த்ராஜ் வரும் காட்சிகள் அனைத்து சிரிப்பால் அதிர்கிறதாம். மற்ற
கேரக்டர்கள் தேர்வில் இயக்குனர் கோட்டை விட்டுள்ளார் என்று
தெரிவிக்கின்றனர். வடிவேலு – நடிகர் ஆனந்த்ராஜ் சந்திக்கும் காட்சிகள்
அனைத்தும் சிரிப்பு அலையால் அதிர்கிறது என்று விமர்சகர்கள்
தெரிவிக்கின்றனர்.
வடிவேலுவும் செமையாக உழைத்துள்ளார் இந்த படத்திற்கு.
ஆனால் கதை, திரைக்கதையில் பெரிய ஓட்டை விழுந்துள்ளது என்று ரசிகர்கள்
தரப்பில் தெரிவிக்கின்றனர்.