தீவிர ரசிகை மரணதிற்கு ஓவியாவின் ரியாக்சன்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்னும் எத்தனை சீசன்கள் வந்தாலும், முதல் சீசனின் போட்டியாளர்களின் ஒருவரான ஓவியாவுக்கு இணையாக இன்னொரு போட்டியாளர் வருவது கடினம் என்பதே ஒட்டுமொத்த பிக்பாஸ் ரசிகர்களின் கருத்தாக உள்ளது. பிக்பாஸ் என்றவுடன் அனைவருக்கும் முதன்முதலில் ஓவியாவின் பெயர் தான் ஞாபகத்துக்கு வரும்.

ஓவியா மீது கோடிக்கணக்கான ரசிகர்கள் அன்பு வைத்தது போலவே அவரும் தனது ரசிகர்கள் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஓவியாவின் தீவிர ரசிகைகளில் ஒருவரான சான்வி என்பவர் திடீரென சமீபத்தில் மரணம் அடைந்தார். அவர் மரணமடைவதற்கு முன் ஒரு முறையாவது ஓவியாவை பார்க்கவேண்டும் என்று ஆசை கொண்டு இருந்தாராம். ஆனால் அந்த ஆசை நிறைவேறாமலே அவர் இறந்துவிட்டார்

இதுகுறித்து தகவலறிந்த ஓவியா உடனடியாக தன்னுடைய தீவிர ரசிகையின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்த அவர், சான்வியின் பெற்றோர்களை தான் சந்திக்க விரும்புவதாகவும், அவர்களை தொடர்புகொள்ள தனக்கு யாராவது உதவுங்கள் என்றும் கேட்டுள்ளார்

ரசிகையின் மரணத்திற்கு உடனடியாக ரியாக்சன் செய்ததோடு நெகழ்ச்சியாக அவரது பெற்றோர்களையும் சந்திக்க முடிவு செய்த ஓவியாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.