குழந்தையுடன் நயன்தாரா புகைப்படம்... உண்மையில்லை என தகவல்

சென்னை: முதல் முறையாக தனது குழந்தையின் முகத்தை காட்டி நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் புகைப்படம் வெளிவந்துள்ளது. ஆனால் அது உண்மையில்லை என்று தெரிய வந்துள்ளது.

நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுடைய திருமணம் நடந்து 4 மாதங்களிலேயே தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது என அறிவித்தனர்.

வாடகைத்தாய் மூலம் தான் இந்த இரட்டை குழந்தைகளை இவர்கள் பெற்றுக்கொண்டனர் என அதன்பின் தெரியவந்தது.

இதனால் சட்ட ரீதியான சிக்கல்களையும் இவர்கள் சந்தித்து, அதற்கு எல்லாம் பதிலளித்து அதிலிருந்து வெளிவந்தார்கள்.

தனது இரட்டை குழந்தைகளுடன் புகைப்படம் வெளியிட்டாலும், அவர்களுடைய முகத்தை மறைத்து தான் வெளியிடுவார்கள். இந்நிலையில், முதல் முறையாக தனது குழந்தையின் முகத்தை காட்டி நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் புகைப்படம் வெளிவந்துள்ளது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், இது தான் நயன்தாராவின் குழந்தை என நினைத்து இந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள். ஆனால், அது உண்மையில்லை. இந்த குழந்தை நயன்தாராவின் குழந்தை இல்லை என்றும் தெரியவந்துள்ளது.