மலேசியாவிலும் பொன்னியின் செல்வன் வசூல் அமோகம்

மலேசியா: மலேசியாவிலும் பொன்டனி படத்தின் வசூல் அமோகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ்ராஜ், சரத்குமார், பார்த்திபன், ஜெயராம், பிரபு, விக்ரம் பிரபு என பெரும் நட்சத்திர பட்டாளத்தை கொண்ட படம் ‘பொன்னியின் செல்வன்’.

கல்கி எழுதிய வரலாற்று நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் சுபாஷ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன.

மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் வெளியானதில் இருந்து தமிழகம் உட்பட உலகம் முழுவதும் நல்ல வசூலை ஈட்டி வருகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இந்நிலையில், மலேசியாவிலும் இந்தப் படத்தின் வசூல் அமோகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த நாட்டில் 5 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன. மேலும் இப்படம் வெளியான ஆறு நாட்களில் சுமார் 11.18 மில்லியன் மலேசிய ரிங்கிட் வசூலித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் நாட்டில் வெளியாகி அதிக வசூல் செய்த படம் இதுவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தின் வசூலை விட பொன்னியின் செல்வன் முந்தியுள்ளது.