“பையா” படம் வெளியாகி இன்றுடன் 13 வருடம்

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் மனதை வருடும் மாய இசையினால் அனைவரையும் துள்ளாட்டம் போட வைக்கும் பாடல்கள் இப்படத்திற்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் மிகப்பெரிய தாக்கத்தினை உண்டாக்கியது.

என்னதான் இது கார்த்தியின் 2-வது படமாக இருந்தாலும், அவரின் அசத்திய நடிப்பில் ஏதோ 100, 200 படங்களை நடித்தது போன்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருப்பர். இந்த படத்தில் அவரின் துருதுருவென இருக்கும் பாவனை பார்பதுர்க்கே அழகாக இருக்கும்.

பாலில் செய்த சிலை போல இப்படத்தில் தமன்னா தனது க்யூட் ஆன நடிப்பினால் இளைஞர்களின் மனதினை சுண்டி இழுத்திருப்பர். அடடா மழைடா அட மழைடா பாடலுக்கு அவர் ஆடிய ஆட்டம் திரையரங்குகளில் அனைவரையும் எழுந்து ஆட செய்தது.

என் காதல் சொல்ல நேரமில்லை, சுத்த்துதே சுத்துதே பூமி, ஏதோ ஒன்று என்னை தாக்க என காலத்தினால் அழிக்க முடியாத பாடல்களை யுவன் சங்கர் ராஜா இன்ச் பை இன்ச் ஆக செதுக்கி இருப்பர். இப்படம் கடந்த 2010 -ம் ஆண்டு இயக்குனர் லிங்குசாமி அவர்களால் வெளியிடப்பட்டது. திருப்பதி பிரதர்ஸ் இப்படத்தினை தயாரித்தினர். இந்த படம் கார்த்தி மற்றும் தமன்னா வின் திரையுலக வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாகருயிந்தது.