அண்ணாத்த படத்தின் படப்பிடிப்புக்காக ஐதராபாத் செல்லும் ரஜினி!

சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்குவது எப்போது என்பது குறித்த புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் 'அண்ணாத்த'. கிராமத்து பின்னணியில் விவசாய கதையம்சம் உள்ள படமாக தயாராகி வரும் இதில், குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ் ராஜ், சதீஷ், சூரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். ஏற்கனவே 50 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக கடந்த 6 மாதமாக இதன் படப்பிடிப்பு நடைபெறாமல் இருந்தது.

இந்நிலையில், வருகிற அக்டோபர் 15-ந் தேதி முதல் மீண்டும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதற்காக நடிகர் ரஜினிகாந்த் வருகிற அக்டோபர் 8-ந் தேதி ஐதராபாத் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அங்கு சென்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்பவர்களுக்கு கொரோனோ பரிசோதனை மேற்கொள்ள உள்ளார்களாம்.