நடிகர் சூர்யாவின் மகள் எடுத்த மதிப்பெண்கள்... குவியும் பாராட்டுக்கள்

சென்னை : நடிகர் சூர்யாவின் மகள் தியா பத்தாம் வகுப்பில் எடுத்துள்ள மதிப்பெண் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதையடுத்து அவருக்கு அனைத்து தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான தம்பதியினர் சூர்யா மற்றும் ஜோதிகா. இவர்கள் இருவரும் பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படத்தின் மூலம் இணைந்து நடிந்த போது காதல் வயப்பட்டனர். உயிரிலே கலந்தது,காக்க காக்க, பேரழகன், மாயாவி,சில்லுனு ஒரு காதல் என 7 படத்திற்கு மேல் இவர்கள் இருவரும் இணைந்து நடித்து உள்ளனர். 2006ஆம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி இரு வீட்டில் உள்ள பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் பிறந்தனர். குடும்பமே சினிமாவில் இருந்து வந்தாலும் இதுவரை தியா மற்றும் தேவ் இருவரும் சினிமாவில் தலை காட்டியதில்லை. இதில் தியா டென்னிஸ், கால்பந்து விளையாட்டுகளில் கவனம் செலுத்தி வருகிறார். தனது சகோதரி தியாவைப் போல படிப்பை தாண்டி தேவ், கராத்தே கலையில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருக்கிறார். இந்நிலையில் நடிகர் சூர்யாவின் மகள் தியா பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியுள்ளார்.

பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், தியாவின் மார்க் சமூக வலைதளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. தனது மகளின் மார்க்கை பார்த்து நடிகர் சூர்யா மகிழ்ச்சி அடைந்துள்ளாராம். தமிழ்- 95, ஆங்கிலம் -99, கணிதம் - 100, அறிவியல்-98, சமூக அறிவியல்-95 என 500க்கு 487 மதிப்பெண் எடுத்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிலும் 95% அளவிற்கு மதிப்பெண்களை பெற்றுள்ளார் தியா. இதையடுத்து அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.