இயக்குனர் அட்லீ – ப்ரியா தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்த ஷாரூக்

சென்னை: இயக்குனர் அட்லீ-ப்ரியா தம்பதிக்கு குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து ஷாருக்கான் மற்றும் நயன்தாரா இருவரும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழில் ஆர்யா, நயன்தாரா, ஜெய் நடித்த ‘ராஜா ராணி’, விஜய் நடித்த ‘மெர்சல்’, ‘தெறி’, ‘பிகில்’ படங்களை இயக்கியவர் அட்லீ. தமிழில் ஒன்றிரண்டு படங்களைத் தயாரித்துள்ளார். முன்னதாக நடிகர் விஜய்யும் வாழ்த்துக்கள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஷாருக்கான் நயன்தாரா நடிப்பில் ‘ஜவான்’ என்ற ஹிந்திப் படத்தை இயக்கி வருகிறார் . 2014 ஆம் ஆண்டு நடிகை பிரியாவை திருமணம் செய்து கொண்ட அவர் 8 வருடங்களுக்கு பிறகு தற்போது தந்தையானார்.

ஜனவரி 31ஆம் தேதி அட்லீ-ப்ரியா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அட்லீ, ‘அவர்கள் சொல்வது சரிதான். உலகில் அத்தகைய உணர்வு இல்லை. பெற்றோருக்கு ஒரு புதிய அற்புதமான சாகசம் இன்று தொடங்குகிறது என்று தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் நடிகர் விஜய், அட்லீ மற்றும் பிரியாவை அழைத்து வாழ்த்து தெரிவித்தார். ஷாருக்கான் மற்றும் நயன்தாரா இருவரும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்