ஒரு வாரம் டெல்லியில் படப்பிடிப்பு... சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர்

சென்னை: ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக டெல்லி நடிகர் ரஜினி கிளம்பி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றன. ஒருவாரம் அங்கு படப்பிடிப்பு நடக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இயக்குனர் நெல்சன் தீலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் சாதனை படைத்தது. நெல்சன் தற்போது ரஜினியின் ஜெயிலர் படத்தை இயக்குகிறார்.

இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். இதனால் ரசிகர்களிடையே படம் குறித்த எதிர்பார்ப்பினை அதிகரிக்க செய்திருக்கின்றது.

இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த் உடன் ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் ஆகியோர் நடிக்க உள்ளதாக செய்தி பரவி வருகிறது. இந்நிலையில் ரஜினி திடீரென டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். ரஜினி ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக டெல்லி சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.

சினிமா படப்பிடிப்பு தொடர்பாக பங்கேற்று ஒரு வாரம் கழித்து சென்னை திரும்புவார் என செய்தி வெளியாகி இருக்கின்றது. இதை அறிந்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இடையில் படப்பிடிப்பில் தொய்வு என்றெல்லாம் செய்திகள் உலா வந்ததும் குறிப்பிடத்தக்கது. தற்போது படத்தின் படப்பிடிப்பு தொடங்கி உள்ள செய்தியால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.