இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் மீண்டும் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார்


நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2 ஆண்டுகளாக உருவாக்கப்பட்டு வரும் திரைப்படம் அயலான். இத்திரைப்படத்தை பிரபல இயக்குனரான ரவிக்குமார் இயக்குகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். ஏலியன் நம்மளுடைய உலகத்திற்கு வந்தால் எப்படி இருக்கும் என்பதனை வைத்து இத்திரைப்படம் எடுக்கப்பட்டு இருக்கிறது.

படத்திற்கான டிரைலரும் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. படத்திற்கான சிஜி வேலைகள் முடியாமல் இருந்த நிலையில், ஒரு வழியாக சிஜி வேலைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனை அடுத்து படம் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதையடுத்து அயலான் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் ரவிக்குமார் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் இணைந்து ஒரு திரைப்படம் செய்யவிருந்தார்களாம்.

பிறகு அயலான் படமே முடியாத காரணத்தால் அந்த திட்டம் அப்படியே இருப்பதாகவும் அயலான் படம் வெளியான பிறகு கண்டிப்பாக அந்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.