ரூ.5 கோடி சம்பளம் வாங்கிய எஸ்.ஜே.சூர்யா

சென்னை: ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்காக எஸ்.ஜே.சூர்யா வாங்கிய சம்பளம் ரூ.5 கோடி என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் – எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் நவம்பர் 10-ஆம் தேதி வெளியானது.

தற்போது இந்த படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். இதுவரை ரூபாய் 32 கோடி வரை வசூல் செய்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்காக எஸ் ஜே சூர்யா வாங்கிய சம்பளம் குறித்து தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதில் இப்படத்திற்காக ரூபாய் 5 கோடி வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது.