அரியவகை நோயால் பாதிப்பு... சமந்தா பதிவை பார்த்து ரசிகர்கள் வேதனை

சென்னை: அரிய வகை நோயால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக நடிகை சமந்தா பதிவிட்டுள்ளார். விரைவில் அதிலிருந்து மீண்டு வருவேன் என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் யசோதா, சகுந்தலம் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் யசோதா திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றது.