சுஷாந்த் சிங்கின் காதலியிடம் நடத்திய விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஞாயிற்று கிழமை தற்கொலை செய்து கொண்டதையடுத்து அவரது தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதுவரை 13 பேர்களிடம் மும்பை போலீசார் விசாரணை செய்து உள்ளனர். அவர்களில் ஒருவர் சுஷாந்த் சிங்கின் காதலி என்று கூறப்படும் நடிகை ரியா சக்கரபோர்த்தியும் ஒருவர்.

நடிகை ரியா சக்கரபோர்த்தியிடம் கிட்டத்தட்ட 9 மணி நேரம் மும்பை போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் பல தகவல்கள் கசிந்துள்ளன. முதல் கட்டமாக சுஷாந்த் சிங்கை அவர் காதலித்ததாகவும் இருவரும் திருமணத்திற்கு முன்பே குடும்பம் நடத்தியதாகவும் அதிர்ச்சி செய்திகள் வெளிவந்துள்ளது.

மேலும் வரும் நவம்பரில் இருவரும் திருமணம் செய்ய திட்டமிட்டு இருந்ததாகவும் ஆனால் இடையே தங்களுக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட்டதாகவும் அவர் கூறினார். இருப்பினும் அவ்வப்போது சமாதான ஆகியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் சுஷாந்த் உடன் தான் பகிர்ந்துகொண்ட வீடியோக்கள் புகைப்படங்கள் ஆகியவற்றையும் அவர் காவல்துறையிடம் ஒப்படைத்ததாகவும் தெரியவருகிறது.