சுந்தர் சி தயாரிப்பில் கன்னட படத்தின் தமிழ் ரீமேக் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!

பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கி வரும் அரண்மனை 3 படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து, இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சுந்தர் சி தயாரிப்பில் கன்னட படம் ஒன்றின் ரீமேக் ஒன்று தயாராக உள்ளதாக கூறப்பட்டது. மிரளும், கன்னட மொழியில் சூப்பர் ஹிட்டான மாயாபஜார் 2016 என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக் படத்தை சுந்தர் சி தயாரிக்கவிருப்பதாகவும், இந்த படத்தை அவருடைய இணை இயக்குனர் பத்ரி என்பவர் இயக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியானது

இந்த செய்தி தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று இந்த படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. அதோடு இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

பிரசன்னா, ஷாம், அசோக் செல்வன் ஆகிய மூன்று ஹீரோக்கள் நடிக்கும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் யோகி பாபு நடிக்கிறார். ஸ்ருதி என்பவர் நாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு சத்யா இசையமைக்கின்றார்.