சனம்ஷெட்டியை வெளியே அனுப்பிய பிக்பாஸ் வீடு ; ரசிகர்கள் கண்டனம்

அதிர்ந்த சோஷியல் மீடியா... 'சனம் ஷெட்டியை வெளியே அனுப்பியது அநியாயம்' என்கிற குமுறல்களும் 'சனம் இல்லையென்றால் பிக் பாஸ் பார்க்க மாட்டோம்' என்கிற வசனங்களும் நேற்று சோஷியல் மீடியாவை ஆக்கிரமித்தது.

#NoSanamNoBiggBoss என்கிற ஹாஷ்டேகையும் ட்ரெண்ட் செய்திருந்தனர் நெட்டிசன்கள். முதல் சீசனில் ஓவியாவைத் தொடர்ந்து, மக்களின் அன்பையும் வரவேற்பையும் ஆதரவையும் பெற்றிருக்கிறார் சனம் ஷெட்டி. ஷிவானி, ரம்யாவைவிட சனம் ஷெட்டி எந்த வகையில் மக்களின் அதிருப்திக்கு ஆளாகியிருக்கிறார் என்பது தெரியவில்லை.

அகம் டிவி வழியே எத்தனை பேர் சனம், அனிதா மற்றும் ஷிவானியை காப்பற்ற விரும்புகிறீர்கள் என்ற கமலின் வாக்கெடுப்பில், வீட்டிலேயே அதிகப்படியான வாக்குகளைப் பெற்றார் சனம்.

இதில் வேடிக்கையான விஷயமே அர்ச்சனா, நிஷா எல்லாம் சனம் ஷெட்டிக்கு ஆதரவு தெரிவித்ததுதான். ஆக, ஷிவானிக்கு பாலா, ஆஜீத் தவிர வீட்டினுள் யாரும் சப்போர்ட் செய்யவில்லை.

உண்மையில் இது மக்கள் வாக்களிப்பில் அடிப்படையில் வெளியேற்றப்பட்ட எவிக்ஷன்தானா என்கிற சந்தேகம் யாருக்கும் எழாமலில்லை. சனம் எவிக்ட் ஆனதும், உண்மையில் மனதார வருத்தப்பட்ட இரண்டே பேர் அனிதாவும், ஆரியும்தான். ஆனால், சனமின் ஆட்டிடியூட் வேற லெவல். பாலாவை நேரடியாக முகத்தைப் பார்த்துச் சண்டைபோடும் ஒருவர் என்றால் அது சனம்தான். வெளியேறும்போதுகூட, 'என்னுடைய டைட்டிலை உனக்கு விட்டுக்கொடுக்கிறேன் போ' என்று தன்னம்பிக்கை குறையாமல் சொல்லி விட்டுத்தான் சென்றார்.

சனம் டைட்டில் வெற்றிபெற்றிருந்தால்கூட அவருக்கு இந்த அளவிற்கு வரவேற்பு கிடைத்திருக்காது. நேற்றைய தினம் இந்திய அளவில் சனமின் தினமாகவே இருந்தது. அவ்வளவு ஏன்.. பிக் பாஸ் வரலாற்றிலேயே போட்டியாளர் ஒருவர் வெளியே செல்லும்போது 'ஆல் தி பெஸ்ட்' என்று பிக் பாஸே கூறியது இதுவே முதல் முறை.