பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்தது

வரும் 2023 ஏப்ரல் 28-ந்தேதி ரிலீஸ் .... 2022ல் இந்திய சினிமாவையே திரும்பிப்பார்க்க வைத்த படம் என்றால் அது பொன்னியின் செல்வன் -1 என்று சொல்லலாம். மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 30-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

இப்படத்தில் நடிகர்கள் கார்த்தி ,விக்ரம் ,ஜெயம் ரவி ,ஜெயராம், பிரகாஷ் ராஜ் ,பார்த்திபன், சரத்குமார், பிரபு , ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி என நட்சத்திர பட்டாளங்களின் நடிப்பில், ஏ.ஆர்.ரகுமானின் இசையில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் திரைப்படம் இந்தாண்டின் மாபெரும் வெற்றி படமாக அமைந்துள்ளது.

இந்த திரைப்படத்தை இயக்குனர் மணிரத்னம் 2 பாகங்களாக உருவாக்கியுள்ளார். இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு பணிகள் அனைத்தையும் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், தற்போது அதற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை படக்குழு மேற்கொண்டு வருகிறது.

இதற்கு இடையே 'பொன்னியின் செல்வன்' குறித்து இன்று முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிடப்போவதாக படக்குழு நேற்று அறிவித்திருந்தது.

எனவே அதன்படி லைகா நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில், பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் 2-ம் பாகம்ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.