லியோ சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரி, இன்று மாலை அரசு அதிகாரிகளுடன் படத்தின் தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தை

லியோ திரைப்படம் நாளை மறுநாள் வெளியாக உள்ள நிலையில், காலை 4 மற்றும் 7 மணி காட்சிகளுக்கு அனுமதி கோரிய வழக்கில், இதை தமிழக அரசே முடிவு செய்யும் என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. எனவே அதன்படி, 9 மணி காட்சிக்கு பதிலாக, 7 மணிக்கு தொடங்க தமிழக அரசிடம் மனு அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், லியோ படத்திற்கு காலை 7 மணிக்கு சிறப்பு காட்சி அனுமதி தொடர்பாக தமிழ்நாடு அரசு அதிகாரிகளுடன் இன்று மாலை 4 மணிக்கு பட படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக இன்று மாலை அல்லது நாளை மதியத்திற்குள் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதன் இடையில், சினிமா விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டதில்லை எஎன்று ன அமைச்சர் ரகுபதி விளக்கமளித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், லியோ திரைப்படத்திற்கு 5 சிறப்பு காட்சிகள் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

திரை உலகம் எங்களுடை நட்பு உலகம், திமுக அரசு திரைத்துறையை முடக்கவில்லை, அவர்களை உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்துகிறோம். லியோ திரைப்பட விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்படுவோம் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கமளித்து உள்ளார்.