கோவாவில் நிறைவடைந்த முதற்கட்ட படப்பிடிப்பு

சென்னை: சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தற்போது கோவாவில் நிறைவடைந்துள்ளது என்று தகவல்கள் ெளியாகி உள்ளது.

படக்குழுவினருடன் சிறுத்தை சிவா எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து இதை உறுதிப்படுத்தியுள்ளனர் படக்குழுவினர். இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .

யூவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ராஜா, வம்சி பிரமோத் மற்றும் கே.ஈ. ஞானவேல் ராஜா கூட்டணியில் இணைந்து தயாரிக்கும் சூர்யா 42 படம் பிரமாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.

நடிகர் சூர்யா இயக்குனர் சிறுத்தை சிவாவுடன் கூட்டணி சேரும் முதல் திரைப்படம் இதுவாகும். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஆகஸ்ட் மாதம் தொடங்கியது.

பின்னர் அதனை தொடர்ந்து படப்பிடிப்பு செப்டம்பர் மாத இறுதியில் தொடங்கப்பட்டு தற்போது முடிவடைந்துள்ளது. இப்படத்தில் நடிகர் சூர்யா ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். இந்த முதல் கட்ட படப்பிடிப்பில் படத்தின் கதாநாயகியின் காட்சிகள் படமாக்கப்பட்டன என கூறப்படுகிறது. படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.