விஷாலின் ‘மார்க் ஆண்டனி’ படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடையை உயர்நீதிமன்றம் நீக்கியது

‘மார்க் ஆண்டனி’ படத்தின் தயாரிப்பில் நடிகர் விஷாலுக்கு தொடர்பில்லை என்பதால், படத்தை வெளியிட அனுமதி ...விஷால் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் நடிகர் விஷால் படங்களை தயாரிக்க கடன் வாங்கி உள்ளார். எனவே இதன் மூலம் அவர் பெற்ற ரூ.21.29 லட்சம் கோடி கடனை லைகா புரொடக்சன் நிறுவனம் ஏற்று செலுத்தியது.

இக்கடனை நடிகர் விஷால் செலுத்தவில்லை என்று லைகா வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில் 2021 ஜனவரி 1 முதல் 2023 செப்டம்பர் வரையிலான நடிகர் விஷாலின் 4 வங்கி கணக்கு விவரங்கள், நடிகர் விஷால் மற்றும் அவரது குடும்பத்தினரின் அசையும்,


மேலும் அசையா சொத்து விவரங்களையும் தாக்கல் செய்ய லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. மார்க் ஆண்டனி படத்தை வெளியிட ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை நீக்கி நீதிபதி உத்தரவு நீதிமன்ற உத்தரவுப்படி நடிகர் விஷால் நேரில் ஆஜராகினார்.

இதையடுத்து நீதிமன்றத்தில் கூறியதற்கு முரணாக வங்கி கணக்கில் விவரம் எதுவும் இருந்தால் எதிர்காலத்தில் படம் எதுவும் நடிக்க முடியாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து வழக்கு விசாரணை வருகிற செப்.19க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.