விஜய்யை வைத்து படம் இயக்காததுதான் வேதனை... சுந்தர்.சி சொல்கிறார்

சென்னை: விஜய்யை வைத்து ஒரு படம் கூட இயக்கவில்லையே என்பதுதான் எனது வேதனையாக உள்ளது என்று நடிகரும், இயக்குனருமாக சுந்தர்.சி தெரிவித்துள்ளார்.

விஜய்யை பற்றி பலரும் பெருமையாக கூறிவரும் நிலையில், இயக்குனரும், நடிகருமான சுந்தர்.சி-யும் என்ன சொல்லியிருக்கார் என்று பாருங்கள். அவர் தற்போது நடித்து முடித்துள்ள 'பட்டாம்பூச்சி' படம் வெளியாகவுள்ள நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட அவர் நடிகர் விஜய் குறித்து பேசியுள்ளார்.

விஜய்யை பற்றி கூறியதும் உங்கள் நினைவுக்கு வரக்கூடிய விஷயம் என்னவென்று கேட்டதற்கு, பதிலளித்த சுந்தர்.சி எனக்கு லைஃப்-ல ஒரே ஃபீலிங் விஜய் சார் கூட படம் பண்ணாதது தான். நான் ரஜினிகாந்த் சாருடனும் பணிபுரிந்து விட்டேன், கமல்ஹாசன் சாருடனும் பணிபுரிந்துவிட்டேன் அஜித் சாருடனும் பணிபுரிந்துவிட்டேன்.

ஆனால் இன்னும் விஜய் சாருடன் மட்டும் இன்னும் இணைந்து பணியாற்றவில்லை. விஜய் சாருடன் மட்டும் இணைந்து பணியாற்றிவிட்டால் எனது வாழ்வு முழுமைபெறும் என்று கூறியுள்ளார். இவரது இந்த பேட்டியை விஜய் ரசிகர் வெகுவாக வைரலாக்கி வருகின்றனர்.

பத்ரி இயக்கத்தில் சுந்தர்.சி மற்றும் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள 'பட்டாம்பூச்சி' படம் ஜூன்-24ம் தேதி வெளியாகுகிறது. தற்போது நடிகர் விஜய் வம்சி இயக்கத்தில் 'தளபதி 66' படத்தின் பணிகளில் பிசியாக இருந்து வருகிறார். அதனைத்தொடர்ந்து லோகேஷ் இயக்கத்தில் 'தளபதி 67' படத்தில் நடிக்கவிருக்கிறார்.