நடன இயக்குனர் பிருந்தா இயக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு

சென்னை: படப்பிடிப்பு நிறைவு... நடன இயக்குனர் பிருந்தா இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடன இயக்குனராக வலம் வருபவர் பிருந்தா. சமீபத்தில் துல்கர் சல்மானை வைத்து 'ஹே சினாமிகா' என்ற படத்தை இயக்கினார். அந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது புதிய அதிரடி ஆக்ஷன் படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் பாபி சிம்ஹா கதாநாயகனாக நடிக்கிறார். வில்லனாக ஆர்.கே.சுரேஷும், முக்கிய கதாபாத்திரத்தில் முனிஸ் காந்த் மற்றும் பாலிவுட் நடிகர் ஹிருது ஹாரூன் ஆகியோரும் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு 'குமரி மாவட்டத்தின் தக்ஸ்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார் எச்.ஆர் பிக்சர்ஸ் சார்பில் ரியாஷிபு என்பவர் தயாரிக்கிறார். இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவு பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தின் அடியாட்களுக்கு இடையே நடக்கும் வன்முறை சம்பவங்களை வைத்து இந்தப் படம் எடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் இப்படம் உருவாகிறது.