பொன்மகள் வந்தாள் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியது!

நடிகை ஜோதிகாவின் ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இந்த படம் குழந்தைகள் கடத்தல் கதையம்சம் கொண்ட படம் என்றும் குழந்தை கடத்தலுக்கு எதிராக போராடும் ஒரு வழக்கறிஞராக தான் ஜோதிகா நடித்துள்ளார் என்பதும் டிரைலரில் இருந்து தெரியவருகிறது

டிரைலரில் இருக்கும் ஒவ்வொரு காட்சியும் அதிர வைக்கும் வகையில் உள்ளது என்பதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. மேலும் இந்த படத்தில் ஜோதிகா எடுத்துக்கொண்ட வழக்கு ஒன்றில் தோல்வி அடைந்தவுடன் ’இந்த உலகத்தில் உடல் ரீதியாக துன்புறுத்தப்படும் அனைவரிடத்திலும் உண்மையை தவிர வேறு எந்த சாட்சியும் இருக்காது, போராடி தோத்துட்டேன்னு சொல்றதுக்கு இது கேம் இல்லை, ஜஸ்டிஸ்’ என்று ஜோதிகா பேசும் வசனமே இந்த படத்தின் கதையை ஊகிக்க வைக்கிறது

மொத்தத்தில் ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் ஜோதிகா நடித்த படங்களில் வித்தியாசமான ஒன்றாக இருக்கும் என்பது ட்ரெய்லரில் இருந்து தெரிய வருகிறது.