வயது வித்தியாசம் பார்க்காமல் வதந்தி பரப்புகின்றனர்

ஐதராபாத்: வயது வித்தியாசம் பார்க்காமல் எப்படி இவ்வாறு வதந்திகளை பரப்புகிறார்கள் என தெரியவில்லை. துளசி எனக்கு அம்மா போன்றவர். அவர் படப்பிடிப்புத்தளத்தில் என்னிடம் அக்கறையாக நடந்து கொள்வார் என்று நடிகர் பிரபாஸ் வினு தெரிவித்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

சகலகலா வல்லவன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை துளசி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கன்னட இயக்குனர் சிவமணியை நடிகை துளசி திருமணம் செய்தார். தமிழில் ஹீரோயினாக அறிமுகமான இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு அக்கா, அண்ணி போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது பட வாய்ப்புகள் இல்லாத சூழலில் நிகழ்ச்சி ஒன்றை பிரபாஸ் ஸ்ரீனுவுடன் இணைந்து நடத்திக் கொண்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சி ஒரு ஆண்டை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் துளசி பிரபாஸ் ஸ்ரீனுவை அன்போடு டார்லிங் என அழைப்பார். அதை வைத்து அவர்கள் இருவரும் காதலிப்பதாக கதை கட்டி விட்டனர்.

இதற்கு பிரபாஸ் ஸ்ரீனு பேட்டி ஒன்றில் விளக்கம் கொடுத்து பேசியுள்ளார். அதில், 'வயது வித்தியாசம் பார்க்காமல் எப்படி இவ்வாறு வதந்திகளை பரப்புகிறார்கள் என தெரியவில்லை. துளசி எனக்கு அம்மா போன்றவர். அவர் படப்பிடிப்புத்தளத்தில் என்னிடம் அக்கறையாக நடந்து கொள்வார்'.

'எங்களுக்குள் உள்ள உறவு அம்மா மகனுக்கு இடையே உள்ள உறவு என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.