சின்னத்திரையில் நடிக்கும் போது கூட இப்படி இல்லை... வாணி போஜன் வேதனை

சென்னை: ஒரு படத்தில் ஹீரோவோட நடித்துவிட்டால் அவர்களுடன் இணைத்து தவறாக எழுதி வைத்துவிடுவார்கள் என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார் நடிகை வாணி போஜன்.

சின்னத்திரை நயன்தாரா என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் தான் நடிகை வாணி போஜன். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வ மகள் என்ற சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது இவர் பல பிரபல ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து அசத்தி வருகிறார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட வாணி போஜன் லிவிங் ரிலேஷன்ஷிப் குறித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறுகையில், தொலைக்காட்சியில் இருக்கும் வரை என்னை யாரும் அப்படி பேசவில்லை.

ஒரு படத்தில் ஹீரோவோட நடித்துவிட்டால் அவர்களுடன் இணைத்து தவறாக எழுதி வைத்துவிடுவார்கள். ஏன் இந்த மாதிரி எல்லாம் போடுகிறார்கள், வியூஸ் வேண்டும் எண்ணத்தில் எதாவது பொய்யான தகவலை பரப்புகிறார்கள் என்று வாணி போஜன் கூறியுள்ளார்.