ரஜினி படத்தின் தலைப்பு ஜெயிலர்... சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவிப்பு

சென்னை: ஜெயிலர்... ரஜினி படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் 169-வது படத்தின் டைட்டில் ஜெயிலர் என்று சன்பிச்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியான அண்ணாத்த படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் அடுத்து யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்று பெரிய கேள்வி எழுந்த நிலையில், ரஜினி நடிக்கும் அடுத்த படத்தை இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்குவார் என்றும் சன்பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது.

கோலமாவு கோகிலா என்ற சுமாரான வெற்றிப்படத்தை கொடுத்த இயக்குநர் நெல்சன் அடுத்து சிவகார்த்திகேயனை வைத்து இயக்கிய டாக்டர் படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக விஜய் நடிக்கும் படத்தை இயக்குகிறார் என்ற தகவல் வெளியானதும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது.

ஆனால் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு விஜய் நெல்சன் காம்போவில் வெளியான பீஸ்ட் படம் படுதோல்வியை சந்தித்து. படத்தில் நிறைய லாஜிக் மிஸ்டேக் உள்ளது என்று கூறி நெட்டிசன்கள் பலரும் கடுமையாக விமர்சனங்களை தொடுத்தனர். பீஸ்ட் படத்தின் தோல்வியால் ரஜினி படத்தின் வாய்ப்பு நெல்சன் கையை விட்டு நழுவியதாக கூறப்பட்டது.

இந்த தகவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ரஜினியின் அடுத்த படத்தை நெல்சன் இயக்குவார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால் இந்த படத்தின் திரைக்கதையை இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் எழுதுவார் என்று கூறப்பட்ட நிலையில்சன்பிச்சர்ஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இந்த படத்தின் ஃபர்ஸ்லுக் போஸ்டரை ஜெயிலர் என்ற டைட்டிலுடன் வெளியிட்டுள்ளது.

இந்த படத்திற்கு திரைக்கதை இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் எழுதுவார் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது அவர் படத்தில் ஒரு நடிகராக மட்டுமே உள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.