இயக்குனர் மிஸ்கினுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் வெளியிட்ட விஜய் ரசிகர்கள்

சென்னை: நடிகர் விஜய்யை ஒருமையில் பேசியதால் இயக்குனர் மிஸ்கினுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் டிசைன் செய்து விஜய் ரசிகர்கள் அதை சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளனர். இது கடும் கண்டத்திற்கு உள்ளாகி வருகிறது.

இயக்குனர் மிஸ்கின் தற்போது தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். அண்மையில் இவர் வில்லனாக நடித்த மாவீரன் படம் வெளிவந்தது. தொடர்ந்து அடுத்ததாக லியோ திரைப்படத்தில் ஒரு முக்கிய ரோலில் மிஸ்கின் நடித்துள்ளார். நேற்று லியோ படம் குறித்தும் லியோ படத்தை விஜய் பார்த்து விட்டதாகவும் பத்திரிகையாளர்களிடம் கூறினார்.

ஆனால், இதில் நடிகர் விஜய்யை ஒருமையில் பேசினார் என கூறி, மிஸ்கினுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒன்றை டிசைன் செய்து அதை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர் ரசிகர்கள்.

இந்த பதிவில் 'தீதும் நன்றும் பிறர் தர வாரா.! எங்கள் தளபதியை ஒருமையில் பேசிய அடி முட்டாளே.! மனநலம் குன்றியவனே.! அறிவுகெட்டவனே.! மன்னிப்பு கேள்..! எச்சரிக்கையுடன்..! தளபதி வெறியர்கள்' என தெரிவித்துள்ளனர். இந்த பதிவு பலரது கண்டனத்திற்கு உள்ளாகி வருகிறது.