மலேசியா படப்பிடிப்பில் பங்கேற்ற விஜய் சேதுபதி சூழ்ந்த ரசிகர்கள்

மலேசியா: மலேசியாவில் நடந்த படப்பிடிப்பின்போது நடிகர் விஜய் சேதுபதியை சூழ்ந்த ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் அவரிடம் ஆட்டோகிராப் வாங்கி கொண்டனர்.

’ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தின் இயக்குநர் ஆறுமுகக்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி புதிய படத்தில் நடித்து வருகிறார்.

7 சிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், படப்பிடிப்பின்போது மலேசியா வாழ் தமிழர்கள் விஜய் சேதுபதியை சூழ்ந்துகொண்டு புகைப்படங்கள் எடுத்தும் கையொப்பங்களைப் பெற்றும் மகிழ்ச்சியடைந்தனர்.