சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய விக்ரம்

பொதுவாகவே தமிழ் சினிமாவில் ஒரு நடிகரின் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றுவிட்டது என்றால் அந்த நடிகர் தன்னுடைய சம்பளத்தை அடுத்த படங்களில் உயர்த்துவது வழக்கமான ஒன்று.அப்படி தான் நடிகர் விக்ரம் சரியான ஒரு மாஸ்டர் பிளான் ஒன்றை போட்டு அடுத்த படத்திற்கு சம்பளத்தை அதிரடியாக உயர்த்தி இருக்கிறார்.

விக்ரமிற்கு தங்கலான் படத்தில் நடித்து வந்த சமயத்திலேயே சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம். ஆனால், தங்கலான் படத்திற்கு எப்படி வரவேற்பு கிடைக்கிறது என்பதை பார்த்துவிட்டு படங்களில் நடிக்க கமிட் ஆவோம் என தான் திட்டமிட்டு இருந்தாராம். அதன்படியே வெளியாவதற்கு முன்பே தங்கலான் படத்திற்கு பெரிய அளவிற்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ள காரணத்தாலும் அவர் படத்தை பாதி பார்த்ததால் கண்டிப்பாக படம் பெரும் அளவில் வெற்றிபெறும் என எதிர்பார்த்து இருக்கிறாராம்.

இதையடுத்து தங்கலான் திரைப்படம் கண்டிப்பாக வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரிய அளவில் பேசப்படும் என்ற காரணத்தால் அவர் தான் நடிக்கவுள்ள அடுத்த படத்திற்கான சம்பளத்தை அதிரடியாக உயர்த்தி உள்ளார். எனவே அதன்படி, அவர் தங்கலான் படத்தை தொடர்ந்து தன்னுடைய 62-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். அந்த திரைப்படத்தை சித்தா படத்தை இயக்கிய இயக்குனர் அருண்குமார் தான் இயக்குகிறார்.

இத்திரைப்படத்தை தயாரிப்பாளர் ரியா சுபு என்பவர் தயாரிக்கிறார். இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் விக்ரம் 50 கோடி சம்பளம் வாங்கி இருக்கிறாராம். நடிகர்களின் சம்பளம் ரேசில் பின்னாடி இருந்த விக்ரம் தற்போது சூர்யா, தனுஷ் ஆகியோரை எல்லாம் மிஞ்சும் அளவிற்கு சம்பளம் வாங்கியுள்ளாராம். இத்தகவலை வலைப்பேச்சு தெரிவித்துள்ளது.