நிஜத்திலும் வில்லனா? ராணா டகுபதி மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றம் சம்மன்

ஹைதராபாத்: ராணா டகுபதி மீது வழக்குப்பதிவு... நில அபகரிப்பு வழக்கில் ராணா டகுபதி மற்றும் அவரது தந்தை மீது நீதிமன்றம் வழக்கு பதிவு செய்துள்ளது.

பாகுபலி படத்தில் நடித்த தெலுங்கு நடிகர் ராணா டகுபதி மற்றும் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த அவரது தந்தை சுரேஷ் பாபு ஆகியோர் ஹைதராபாத்தில் உள்ள பிலிம் நகரில் உள்ள தொழிலதிபர் பிரமோத் குமாரின் நிலத்தை அபகரித்ததாக கூறப்படுகிறது.

ரவுடிகளை ஏவி விட்டு பிரமோத் குமாரை மிரட்டி, இடத்தை காலி செய்யுமாறு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்ட பிரமோத் குமார், நடிகர் ராணா டகுபதி மற்றும் அவரது தந்தை சுரேஷ் பாபு மீது நம்பப்பள்ளி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதையடுத்து ராணா டகுபதி மற்றும் அவரது தந்தை சுரேஷ் பாபு மீது நீதிமன்றம் வழக்குப்பதிவு செய்தது. குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது