சுரேஷ் வெளியேற்றப்பட்டதற்கான உண்மையான காரணம் என்ன?

பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் சுரேஷ்தான் வெளியேற போகிறார் என்று கிட்டத்தட்ட யாருக்குமே நம்பிக்கையில்லை. சுரேஷ் அந்த வீட்டில் பலம் வாய்ந்த ஒரு போட்டியாளராக வலம் வந்து கொண்டிருக்கும் போது, அவரது தந்திரம் பலரை ஆச்சரியப்படுத்திக் கொண்டிருக்கும் போது அவர் எப்படி வெளியேற்றப்படுவார்? என்ற கேள்வி பலரது மனதில் இருந்தது

கமல்ஹாசன் நேற்று சுரேஷ்தான் வெளியேற்றப்படுபவர் என்று அறிவிக்கப்படும் வரை பலருக்கும் இதில் நம்பிக்கை இல்லை. இந்த நிலையில் தற்போது குறைந்த வாக்குகளின் அடிப்படையில் சுரேஷ் வெளியிடப்படவில்லை என்றும் வேறு காரணத்தினால்தான் சுரேஷ் வெளியேற்றப்பட்டதாகவும் வந்திருக்கும் செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

நேற்று சுரேஷ் வெளியேறுவதாக அறிவிப்பு வந்த பின்னர் சனம் இதுகுறித்து அவரிடம் கேட்டபோது 'நான் வெளியேறுவதற்கான காரணம் மிக விரைவில் தெரியவரும். அதை நானே சொல்லக்கூடாது' என வழக்கம்போல் பொடி வைத்துப் பேசினார்.

அதேபோல் சுரேஷ் சக்கரவர்த்தி பிக்பாஸ் மேடைக்கு வந்த பிறகு கமல்ஹாசனும் ஒவ்வொரு முடிவும் ஒரு தொடக்கம்தான், சுரேஷ் சக்கரவர்த்தியை நான் வெளியே அனுப்பவில்லை நானாக அனுப்பினேன் என்று நம்பாதீர்கள், அவர் வெளியே செல்வதற்கான காரணம் உள்ளேயும் இருக்கலாம் அல்லது சுரேஷ் ஆகவும் இருக்கலாம், அது என்ன என்று விவாதம் செய்யுங்கள் என்று அவர் கூறியது பெரும் மர்மமாக உள்ளது

சுரேஷ் சக்ரவர்த்தி கடந்த வாரம் முழுவதுமே கேப்ரில்லா விஷயத்தில் கோபித்துக் கொண்டு தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டதோடு சரியாக சாப்பிடாமலும் இருந்ததால் அவரது உடல் நலனை கருத்தில் கொண்டு பிக்பாஸ் அவரை வெளியேற்ற அனுமதித்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.