பிரசாந்தின் சினிமா கேரியர் சரியவடைய என்ன காரணம்?

சென்னை: திருமணம்தான் நடிகர் பிரசாந்தின் வாழ்க்கையை புரட்டி போட்டு விட்டது என்று கோலிவுட்வாசிகள் தெரிவிக்கின்றனர்.

90ஸ் காலகட்டத்தில் விஜய் - அஜித்தை விட டாப்பில் இருந்தவர் டாப் ஸ்டார் பிரஷாந்த். கமல்ஹாசனுக்கு அடுத்து ரொமான்டிக் ஹீரோ என்றால் அது பிரஷாந்த் தான் என்றெல்லாம் கூட பத்திரிகைகளில் பேசப்பட்டது.

அப்படி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் அந்தஸ்தை கொண்டிருந்த நடிகர் பிரஷாந்த் திடீரென மார்க்கெட்டை இழந்து ஃபீல்ட் அவுட் ஆனது எப்படி தெரியுமா? இப்போது கூட கோலிவுட்வாசிகள் பிரசாந்த் என்றால் அவரது பீல்ட் அவுட் ஆன காரணம் பற்றிதான் சொல்கிறார்கள்.

அதற்கு முக்கிய காரணமே அவருடைய திருமண வாழ்க்கை தானாம். கிரகலட்சுமி என்பவருடன் நடிகர் பிரஷாந்துக்கு கடந்த 2005ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின் தான் கிரகலட்சுமி ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பது பிரஷாந்த் குடும்பத்திற்கு தெரிய வருகிறது. இதனால் பிரஷாந்த் வாழ்க்கையில் பல பிரச்சனைகள் நடந்தது.

இதன்பின் கடந்த 2009ம் ஆண்டு கிரகலட்சுமியை விவாகரத்து செய்தார் பிரஷாந்த். இந்த சம்பவத்தினால் பிரஷாந்தின் குடும்பம் மனமுடைந்து போயுள்ளனர். இதனால் பிரஷாந்தால் சினிமாவில் சரியாக காசன்ட்ரேட் செய்ய முடியவில்லை என்றும், இந்த விஷயம் தான் பிரஷாந்தின் சினிமா வாழ்க்கையும் தலைகீழாக மாற முக்கிய காரணம் என்றும் கூறப்படுகிறது.