வணங்கான் படத்திலிருந்து சூர்யா வெளியேற என்ன காரணம்?

சென்னை: பாலாவுக்கு சூர்யா மீது கோபம் ஏற்பட இதுதான் காரணம் என்று ஒரு தகவல் உலா வருகிறது. நடிகர் சூர்யா நடித்து வந்த வணங்கான் படத்தில் இருந்து அவர் வெளியேறி விட்டார்.

சூர்யா நடித்து, தயாரித்து இயக்குனர் பாலா இயக்கத்தில் 40 நாட்கள் வரை ஷூட்டிங் நடந்த வணங்கான் திரைப்படம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் இருந்து சூர்யாவும், 2 டி நிறுவனமும் வெளியேறிவிட்ட நிலையில் இப்போது பாலா வேறு ஹீரோவை வைத்து உருவாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் வணங்கான் படம் சம்மந்தமான ஒரு சுவாரஸ்யமான தகவல் இப்போது வெளியாகியுள்ளது. சூர்யா வணங்கான் படத்தில் நடித்துக் கொண்டு இருந்த போதுதான் லோகேஷ் அவரை சந்தித்து ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடிக்கக் கேட்டாராம்.

முதலில் விருப்பம் இல்லாமல் கேட்ட சூர்யா, பின்னர் வணங்கான் படத்துக்கு பிரேக் விட்டுவிட்டு விக்ரம் படத்தில் போய் நடித்தாராம். இதுதான் சூர்யா மேல் பாலாவுக்கு கோபம் வர காரணமாக அமைந்தது என இப்போது கிசுகிசுக்கள் எழுந்துள்ளன.