இன்றய நாமினேஷன் பட்டியலில் இடம்பெற போவது யார்? யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 40 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நாமினேஷன் படலம் நடக்கும்.

அந்த வகையில் இன்றைய முதல் புரமோவில் நாமினேஷன் செய்யப்படும் காட்சிகள் உள்ளன. இன்றைய நாமினேஷன் படலத்தில் பெரும்பாலானோர் அனிதாவை நாமினேட் செய்தனர். அர்ச்சனா, நிஷா, ரியோ, சம்யுக்தா ஆகியோர் அவரை நாமினேட் செய்கின்றனர். அனிதா சிடுமூஞ்சியாக இருப்பதாக சம்யுக்தா, நாமினேஷனுக்கான காரணத்தை கூறுகின்றார்.

அடுத்ததாக சுசித்ரா நாமினேட் செய்யப்படுகிறார். ஷிவானி, ரம்யா, ஜித்தன் ரமேஷ் ஆகியோர் அவரை நாமினேட் செய்கின்றனர். அதன் பின்னர் பாலாஜியை சோம், ஆரி ஆகியோர் நாமினேட் செய்கின்றனர். பாலாஜியை நாமினேட் செய்வதற்கான காரணத்தை ஆரி குறிப்பிடும்போது, பாலாஜிக்கு அவருடைய காதல் மறைப்பதாக தெரிவித்துள்ளார்.

அதேபோல் ஆரியை பாலாஜி, ஆஜித் ஆகியோர் நாமினேட் செய்கின்றனர். இந்த நிலையில் இந்த வாரம் சுசித்ரா, அனிதா, பாலாஜி மற்றும் ஆரி ஆகிய நால்வர் நாமினேஷன் பட்டியலில் இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.