அடுத்த வாரம் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறாரா நயன்தாரா

சென்னை: அடுத்த வாரம் படப்பிடிப்புக்கு புறப்படுகிறார் நயன்தாரா என்று கோலிவுட்டில் தகவல்கள் வெளியாகி உள்ளது.

காதல் பறவையாக டூயட் பாடிய நயன்தாரா- விக்னேஷ் சிவனுக்கு ஜீன் 9ல் திருமணம் நடந்து முடிந்தது.சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு அடுத்த நாள் இருவரும் திருப்பதி சாமி தரிசனம் செய்து செருப்பு காலுடன் பிரகாரத்தை சுற்றியதாக ஒரு சர்ச்சையில் சிக்கினார்கள்.

அதற்கு விக்னேஷ் சிவன் தரப்பில் மன்னிப்பும் கேட்கப்பட்டது. நயன்தாராவின் திருமணத்திற்கு பெற்றோர்கள் கலந்து கொள்ளாததால் கொச்சினுக்கு மறு வீட்டிற்கு சென்றனர். அங்கு பெற்றோர்களிடம் ஆசி பெற்று இன்னும், சில நாட்கள் நயன்தாராவின் பெற்றோருடன் கொச்சியில் தங்க போகிறார்கள் என தகவல் கிடைத்தது.

அடுத்ததாக கொச்சியில் உள்ள திருவுல்லாவில் உள்ள கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி அவசரமாக இன்னும் ஒரு சில நாட்களில் சென்னை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியது . அட்லீ இயக்கத்தில் நடிகை நயன்தாரா, ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தின்இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் இன்று தொடங்குகிறது. இதன் படப்பிடிப்பில் நடிகை நயன்தாரா அடுத்த வாரம் கலந்து கொள்ள இருப்பதாக கூறியிருந்தார். இதில் கலந்து கொள்வதற்காக கேரளாவில் இருந்து நயன்தாரா நாளை மறுதினம் சென்னை திரும்ப உள்ளதாக தகவல் வந்துள்ளது