நோய் எதிர்ப்பு சக்திகள் நிறைந்த மாம்பழத்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: அனைவரும் அதிகமாக விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்று மாம்பழம். மாம்பழத்தில் அதிகம் நோய் ஏதிர்ப்பு சக்திகள் உள்ளது. மாம்பழம் அதிகம் சாப்பிட்டால் நம் உடலில் இரத்தம் அதிகமாக ஊற உதவுகிறது.

மாம்பழம் புற்றுநோய் போன்ற அபாயகரமான நோய்களின் அபாயத்தைக் குறைக்கும். மா பழத்தின் சாறில் கரோட்டினாய்டுகள், அஸ்கார்பிக் அமிலம், டெர்பெனாய்டுகள் மற்றும் பாலிபினால்கள் உள்ளன. இந்த எல்லா நன்மைகளாலும், மாம்பழம் புற்றுநோயின் அபாயத்தை குறைக்கிறது.

மாம்பழத்தை உட்கொள்வது இதய நோய் அபாயத்தையும் குறைக்கும். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

கொழுப்பின் அபாயத்தைத் தவிர்க்க வேண்டியவர்கள், மாம்பழங்களை சாப்பிடலாம். இதில் நிறைந்துள்ள நியூட்ராசூட்டிகல் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது.

உடலில் பல பாகங்களுக்கு ரத்தத்தை கொண்டு செல்லும் பணியை நரம்புகள் செய்கின்றன. மாம்பழத்தை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு நரம்புகள் நன்கு வலுப்பெறும் நரம்புத்தளர்ச்சி போன்ற நோய்கள் நீங்கும்.

நமது உடலில் இருக்கும் முக்கியமான உறுப்பு கண்கள். சிலருக்கு சத்துக்குறைபாடுகள் மற்றும் இதர காரணங்களால் கண்புரை, கண்பார்வை மங்குதல் போன்றவை ஏற்படுகிறது. அதை முற்றிலும் நீக்கும் உணவாக மாம்பழம் இருக்கிறது.