பூசணிக்காய் ஜூஸ் தினமும் அருந்தினால் ஆரோக்கியம் உயரும்

கண் பார்வை சிறப்பானதாக இருக்கவும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் காலை, மாலை என இருவேளையும் பூசணிக்காய் ஜுஸ் சாப்பிடுங்கள். இதில் உள்ள வைட்டமின்கள் உடல் ஆரோக்கியத்தையும் உயர்த்தும்.

கொரோனா பாதிப்பு நமக்கு பல இன்னல்களை தந்தபோதிலும், நம்மை ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை சூழ்நிலைக்கு கொண்டு சென்றுள்ளது ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தக் கூடிய விஷயம். சமீபத்தில் துரித உணவுகள் எனப்படும் பாஸ்ட்புட் சாப்பாடு சாப்பிடாமல் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிட்டு வருகிறோம்.

கூல்ட்ரிங்க்ஸ் குடிக்காமல், பழச்சாறுகளை அருந்தி ஆரோக்கியத்தை கடைபிடித்து வருகிறோம். அந்த வகையில், வெள்ளை பூசணிக்காயில் வைட்டமின் பி, சி, கால்சியம், இரும்புச்சத்து என பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன.

இதில், உள்ள நீர்சத்து உடல் எடையை குறைக்க பெரிதும் உதவியாக உள்ளது. மேலும் இதில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. பூசணியை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு கண்பார்வை சிறப்பாக இருக்கும். பூசணியை காலை, மாலை என இருவேளையும் ஜூஸ் செய்தும் பருகலாம். இதனால் கண் பார்வை சிறப்பானதாக அமையும். கால்சியம், இரும்பு சத்துக்கள் நிறைந்து இருப்பதால் எலும்பு வலுவடையும், உடல் ஆரோக்கியம் உயரும்.