ஆரோக்கியமான வாழ்வுக்கு, நோய் எதிர்ப்புக்கு சிறப்பான உணவு சாப்பிடுங்கள்

சென்னை: சரியான பழங்கள், காய்கறிகளை உண்பதன் மூலம் புற்றுநோயை தடுக்க முடியும். ஆரோக்கியமான வாழ்வுக்கு காய்கறிகள் உதவுகின்றன.

தற்போதைய காலகட்டத்தில் மனிதர்களுக்கு பெரும் பாதி்பபை ஏற்படுத்கக் கூடிய புற்றுநோய் மற்றும் மாரடைப்பு ஆகியவற்றை சரியான பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்பதன் மூலம் தடுக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

லண்டன் இம்பீரியல் கல்லூரியில் நடத்தப்பட்ட ஆய்வின்படி இம்மாதிரியான உணவுப் பழக்கம், ஒரு வருடத்திற்கு 7.8 மில்லியன் ஆயுட்காலம் முன்னதாகவே வரும் இறப்பை தடுப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

புற்றுநோய் மற்றும் இதய நோய் வரும் ஆபத்தை தடுக்கும் குறிப்பிட்ட பழம் மற்றும் காய்கறியையும் அந்த குழு கண்டறிந்துள்ளது. சிறிய அளவு பழங்களை உட்கொள்வதே உடலுக்கு நலத்தை அளிக்கும் என அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு பங்கு என்பது 80 கிராம் பழம் அல்லது காய்கறியை குறிக்கும். அது ஒரு சிறிய வாழைப்பழம், ஒரு பேரிக்காய் அல்லது மூன்று தேக்கரண்டி பசலைக்கீரை அல்லது பட்டாணியை குறிக்கும்.

இரண்டு மில்லியன் மக்களின் உணவு பழக்கங்களை கொண்டு சேகரித்த தகவல்கள், 95 வித ஆய்வுகள் ஆகியவற்றைக் கொண்டு இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன. பச்சைக் காய்கறி, மஞ்சள் நிற உணவுகள், காலிஃப்ளவர் போன்றவை புற்றுநோய்க்கான ஆபத்தை குறைக்கும் உணவுகள் என்று கண்டறியப்பட்டுள்ளன.