தலைவலி குணமாக உங்களுக்கு இயற்கை வழிமுறை

சென்னை: தலைவலி குணமாக, உடனடி நிவாரணம் பெற இதை குடிக்கலாம். இதனால் தீர்வும் கிட்டும்.

தேவையான பொருள்
எலுமிச்சை 1இஞ்சி 10 கிராம்தண்ணீர் 100 மி.லி

செய்முறை: முதலில், கொடுக்கப்பட்ட பொருட்களை சரியான அளவு எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு இஞ்சியை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கவும்.

நறுக்கிய இஞ்சியை நன்றாக அரைத்து தனியாக சாறு எடுக்கவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் 100 மில்லி தண்ணீரை எடுத்து மிதமான தீயில் சூடாக்கவும். மேலும் தண்ணீரை வடிகட்டி மற்றொரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.

பிறகு தண்ணீருடன் இஞ்சி சாறு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கவும். மேலும் இந்த ஜூஸை தொடர்ந்து குடித்து வந்தால் தலைவலி குணமாகும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.