ஆரோக்கியத்தை உயர்த்தி இருமலை போக்கும் அதிமதுரம் டீ செய்து பாருங்கள்

சென்னை: இஞ்சி டீ, வெல்லம் டீ, ஏலக்காய் டீ கூட சாப்பிட்டு இருப்பீர்கள். அந்த வைகயில் தொண்டை வலியை போக்கும்

அதிமதுரம் டீ சாப்பிடுங்கள். உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். இதை தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்: அதிமதுரம் தூள் - 1 டீஸ்பூன், தண்ணீர் - 1 டம்ளர், நாட்டு சர்க்கரை - தேவைக்கு

செய்முறை: அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட வேண்டும். அதனுள் அதிமதுரம் தூளை தூவி இரண்டு நிமிடங்கள் கொதிக்கவிட வேண்டும். கொதிக்க தொடங்கியதும் நாட்டு சர்க்கரையை கொட்ட வேண்டும்.

அது கரைந்ததும் இறக்கி வடிகட்டி பருகலாம். அருமையான அதிமதுரம் டீ ரெடி. இது தொண்டை வலி மற்றும் புண்ணை ஆற்ற உதவும். சளியையும் போக்கும்.